Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறுதிக்கட்ட நாடாளுமன்ற தொகுதிகான வாக்குபதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது

மே 17, 2019 06:08

நாடாளுமன்றத்துக்கு 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தரபிரதேசம் (13), இமாசலபிரதேசம் (4), சண்டீகார் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக் கும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் நீங்கலான 8 மாநிலங்களில் உள்ள 50 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதால், அங்கு 9 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 

தலைப்புச்செய்திகள்